tamilnadu

img

அடுத்தவர் தாயாரை விமர்சிக்க நான் ஆர்எஸ்எஸ்காரன் அல்ல

உஜ்ஜைனி:

பிரதமர் நரேந்திர மோடி, தங்கள் மீது என்னதான் வெறுப்பைக் கொட்டினாலும், தாங்கள் அவருக்கு அன்பையே திருப்பிக் கொடுப்போம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.


மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனி பகுதியில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி இதுதொடர்பாக மேலும் கூறியிருப்பதாவது:

பிரதமர் மோடி என் தந்தையை அவமானப்படுத்தி வருகிறார். ஆனால், உயிரே போனாலும் நான் அவரது பெற்றோர்களை அவமதிக்கமாட்டேன். மோடியின் மார்பு 56 அங்குலம் என்றால், காங்கிரஸ் கட்சியின் இதயம் 56 அங்குலம். நரேந்திர மோடி என் தந்தையை அவமானப்படுத்துகிறார். என் பாட்டி, என் தாத்தாவைப் பற்றி பேசுகிறார். அதற்காக, நரேந்திர மோடியின் பெற்றோர்களை ஒரு போதும் அவமதிக்கமாட்டேன். ஏனென்றால் நான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் இருந்து வந்தவன் அல்ல. நான் காங்கிரஸ் கட்சியின் பின்புலத்தில் இருந்து வந்தவன். எனவே நான் வெறுக்கத்தக்க வகையில் பேசக்கூடியவனாக இருக்க மாட்டேன். 


எல்லோரும் நம்முடையவர்கள் என்பவன் நான். யாரையும் ஒருபோதும் வெறுக்க மாட்டேன். அனைவரையும் அன்போடு அணைத்துப் பேசுவேன். நரேந்திர மோடியையும் அன்பாலேயே தோற்கடிப்பேன். நரேந்திர மோடிக்கு 56-அங்குல மார்பு என்றால்... காங்கிரசுக்கு 56 அங்குல இதயம் இருக்கிறது.இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.